×

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்தின் காரணம் கண்டறியப்படும் : டி.ஜெ.கோவிந்தராஜன் உறுதி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையத்தில் நேற்று மாலை மேற்கு ஒன்றிய திமுக சார்பில், ஊராட்சி நிர்வாகிகள் பரத்குமார், லட்சுமிநாராயணன் ஆகியோர் ஏற்பாட்டில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன் தலைமை தாங்கினார். ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் ஏசுரத்தினம், மணி, மாவட்ட கவுன்சிலர்கள் சாரதா முத்துசாமி, ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், சிட்டிபாபு, மாவட்ட தலைவர் மாதர்பாக்கம் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி எம்.ஆர்.தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொறுப்பு குழு உறுப்பினர் இஏபி.சிவாஜி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், மாதர்பாக்கம் மனோகரன், மாவட்ட பிரதிநிதி முத்துசாமி ஆகியோர் பங்கேற்று, அதிமுக அரசின் முறைகேடுகள் குறித்து விளக்கி பேசினர்.மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம், தங்கள் பகுதியில் மதுக்கடையை அகற்றவும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து பரிசோதனை வசதிகளையும் ஏற்படுத்தவும், வனத்துறை நிலத்தில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டாவுடன் வீடு கட்டி தரவும், ரேஷன் கடையை திறக்க கோரியும், இங்குள்ள 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வலியுறுத்தினர்.இதைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், அதிமுகவின் உண்மை தொண்டர்களின் 4 ஆண்டு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் வகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கான உண்மையான காரணம் கண்டறிப்படும் என உறுதி கூறினார்….

The post திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்தின் காரணம் கண்டறியப்படும் : டி.ஜெ.கோவிந்தராஜன் உறுதி appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,DMK ,DJ Govindarajan ,Kummidipoondi ,Bharatkumar ,Lakshminarayanan ,West Union DMK ,Ekwarpalayam ,
× RELATED டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில்...